/* */

திருவள்ளூர் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் மேஸ்திரி உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் கட்டிட மேஸ்திரி உயிரிழந்தார். அவரது மனைவி, மகன் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் மேஸ்திரி உயிரிழப்பு
X

திருவள்ளூர் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். காயம் அடைந்த 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருவள்ளூர் அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (44). இவர் தனது மனைவி மகன் உடன் திருத்தணி அருகே உள்ள தனது சொந்த ஊரான தரணிவராகபுரம் பகுதியில் நடைபெற்ற அம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்று பின் ஒரே இருசக்கர வாகனத்தில் ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

திருவள்ளூர்- சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரியும் கொரியர் வாகனமும் மோதிக்கொண்டதில்.பின்னால் வந்த இருசக்கர வாகனம் கொரியர் வாகனத்தின் மீது மோதியதில் கட்டிட மேஸ்திரி சுரேஷ் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு வரும் வழியில் உயிரிழந்தார்.

அவருடைய மனைவி சுதா (34), அவருடைய மகன் மனோஜ் (15). கவலைக்கிடமான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது போன்ற தொடர் விபத்துக்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் அரசு விடப்பட்டுள்ள மணல் குவாரியே காரணமாகும் அதிகமான லாபம் ஈட்டும் முறையில் அதிக அளவில் லாரி உரிமையாளர்கள் அதிவேகமாக லாரிகளை இயக்க சொல்வதால் இத்தகைய கோர விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. எனவே இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க கட்டுப்படுத்த மாவட்ட வட்டார போக்குவரத்து துறை இதில் தலையிட வேண்டும் பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Updated On: 25 May 2023 8:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு