திருவள்ளூர் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் மேஸ்திரி உயிரிழப்பு
![திருவள்ளூர் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் மேஸ்திரி உயிரிழப்பு திருவள்ளூர் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் மேஸ்திரி உயிரிழப்பு](https://www.nativenews.in/h-upload/2023/05/25/1720004-mcms.webp)
திருவள்ளூர் அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். காயம் அடைந்த 2 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திருவள்ளூர் அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (44). இவர் தனது மனைவி மகன் உடன் திருத்தணி அருகே உள்ள தனது சொந்த ஊரான தரணிவராகபுரம் பகுதியில் நடைபெற்ற அம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்று பின் ஒரே இருசக்கர வாகனத்தில் ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
திருவள்ளூர்- சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரியும் கொரியர் வாகனமும் மோதிக்கொண்டதில்.பின்னால் வந்த இருசக்கர வாகனம் கொரியர் வாகனத்தின் மீது மோதியதில் கட்டிட மேஸ்திரி சுரேஷ் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு வரும் வழியில் உயிரிழந்தார்.
அவருடைய மனைவி சுதா (34), அவருடைய மகன் மனோஜ் (15). கவலைக்கிடமான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது போன்ற தொடர் விபத்துக்கள் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் அரசு விடப்பட்டுள்ள மணல் குவாரியே காரணமாகும் அதிகமான லாபம் ஈட்டும் முறையில் அதிக அளவில் லாரி உரிமையாளர்கள் அதிவேகமாக லாரிகளை இயக்க சொல்வதால் இத்தகைய கோர விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. எனவே இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க கட்டுப்படுத்த மாவட்ட வட்டார போக்குவரத்து துறை இதில் தலையிட வேண்டும் பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu