/* */

ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் செம்மரக் கட்டைகள் கடத்தல்: 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் கடத்திய 1.5 டன் செம்மரக் கட்டைகள் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ஆந்திராவில் இருந்து சொகுசு காரில் செம்மரக் கட்டைகள் கடத்தல்: 3 பேர் கைது
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் அருகே கொடிவல்லி பகுதியில் காவல் ஆய்வாளர் டில்லி பாபு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திரா பதிவு எண் கொண்ட சொகுசு கார் சென்னை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்த போது, அந்த காரை பின் தொடர்ந்து தமிழக பதிவு எண் கொண்ட மற்றொரு கார் சென்றதால் சந்தேகம் அடைந்த போலீசார் திடீர் திருத்தணி சோதனைச் சாவடியில் கார் சீட்டுக்கு அடியில் 1.5டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகளை கடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து சொகுசு கார்களுடன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்த போலீசார் திருத்தணி அருகே அலமேலுமங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் மகன் உமாபதி (47), ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த ரத்தினம் (45), அனிஷாஷ் (45) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்ததில் திருப்பதியை அடுத்த வெங்கடகிரி பகுதியில் இருந்து சென்னைக்கு கடத்தப்படுவதாக தெரியவந்தது. தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Updated On: 7 Aug 2021 1:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...