/* */

லாரி டிரைவர் மீது தாக்குதல்- 2 பேர் கைது

லாரி டிரைவர் மீது தாக்குதல்- 2 பேர் கைது
X

திருவள்ளூர் மாவட்டம் வெண்மனம் புதூர் கிராமத்தில் லாரி டிரைவரை தாக்கியதாக 2 பேர் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மணக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் (36). டிப்பர் லாரி டிரைவரான இவர் லாரியில் ராமன் கோயில் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து அரசு குவாரியில் சவுடு மணலை ஏற்றிக்கொண்டு வெண்மனம் புதூர் ஏரிக்கரையோரம் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தீனா (24) மற்றும் அஜித் ஆகிய இருவரும் டிரைவர் பரசுராமனை இவ்வழியாக வந்தது குறித்து அவதூறாக பேசி கையில் வைத்திருந்த பாட்டிலால் தலையில் அடித்ததாக தெரிகிறது.இதில் நெற்றியில் பலத்த காயம் அடைந்த டிரைவர் பரசுராமன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 April 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு