/* */

திருவள்ளூரில் பூட்டியிருந்த வீட்டை கதவை உடைத்து தங்க நகை கொள்ளை

திருவள்ளூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூரில் பூட்டியிருந்த வீட்டை கதவை உடைத்து தங்க நகை கொள்ளை
X

திருவள்ளூர் பெரியகுப்பம் கற்குழாய் தெருவில் வசித்து வருபவர் லட்சுமி(56). இவர் கடந்த மாதம் 23ம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இதனிடையே, மணவாள நகர் பகுதியில் வசிக்கும் லட்சுமியின் மகள் மாலினி, நேரம் இருக்கும் போது வீட்டிற்கே சென்று பார்த்து வருவார். அதன்படி, நேற்று முன்தினம் காலை வீட்டிற்கு வந்திருந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. கண்டு அதிர்ச்சி அடைந்தார்

இதையடுத்து, வீட்டின் உள்ளே சென்று மாலினி பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.7.1/2 லட்சம் மதிப்புள்ள 22 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு, மாலினி தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பாபி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து, வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 2 March 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க