திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் தேசிய பாதுகாப்பு ஆணைய தலைவர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில்  தேசிய பாதுகாப்பு ஆணைய தலைவர் ஆய்வு
X

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் தேசிய பாதுகாப்பு ஆணைய தலைவர் ஆர். ஜி. ஆனந்த் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நலப் பிரிவில் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ஆர். ஜி. ஆனந்த் இன்று ஆய்வு செய்தார்.

ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த கூறியதாவது:-

குழந்தைகள் திருமணம் தொடர்பாக ஆதரித்து பேசிய ஆளுநரிடம் 40 நிமிடம் அவரை சந்தித்து விளக்கம் கேட்டுள்ளேன்.அது தொடர்பாக நாளை சிதம்பரம் சென்று தீட்சிதர்களை சந்தித்தும் விளக்கம் கேட்ட பின் ஆளுநர் கூறியது தொடர்பாக விரிவான விளக்கம் செய்தியாளர்கள் சந்தித்து கொடுக்கப்படும்.

கள்ளக்குறிச்சி மாணவி மற்றும் திருவள்ளூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணை முடிவில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாநிலங்களான தமிழ்நாடு ,ஆந்திரா கேரளா ,கர்நாடகா இவைகளில் உள்ள 21 கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வு செய்ததில். அதில் சில கூர்நோக்கு இல்லங்களில் சிறுவர்களுக்கு ஜாமீன் கிடைக்காததாலும் சிறுவருக்குள்ளே ஏற்படும் கேங் மோதலாலும் தப்பித்து விடுவதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கூர்நோக்கு இல்லங்களில் குழந்தைகளை அடிப்பதாகவோ துன்புறுத்துவதாகவோ எந்த ஒரு புகாரும் வந்ததில்லை.

குழந்தைகள் விளம்பரத்தில் நடிப்பது தொடர்பாக குழந்தைகள் எவ்வளவு மணி நேரம் பள்ளிக்கு போகலாம் விளம்பரத்தில் நடிக்கலாம் என்பது குறித்து ஆணையம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக நிறைய மாற்றங்கள் அரசு செய்ய வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் கூர்நோக்கு இல்லங்களில் இருந்து சிறுவர்கள் தப்பித்துச் செல்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அத்தகைய கூர்நோக்கு மையத்தில் ஆய்வு செய்ததில் குழந்தைகளுக்கு மன அழுத்தம் போக்கக்கூடிய மாத்திரைகள் தன்மை எவ்வளவு அளவு அளிக்கப்படுகிறது என்பது குறித்தும் கூர்நோக்கு இல்லங்களில் நடைபெறும் சிறுவர்கள் தப்பி செல்வதை தவிர்க்கும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் அவர்கள் வீட்டிற்கு சென்று வருவதற்கும் ஆணையத்திற்கு கடிதம் பெறப்பட்டிருப்பதாகவும் ஆணையும் ஆலோசித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ai solutions for small business