திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 63 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 69பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் நேற்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 674 ஆக உள்ளது.

மேலும், இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,15,751 ஆகவும், இதில் 1,13,295 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags

Next Story
ai based agriculture in india