/* */

வேலைக்கு போவது தொடர்பான தகராறில் கணவர் தற்கொலை: போலீஸ் விசாரணை

வேலைக்குப்போகச்சொல்லியதால் மனைவியிடம் சண்டை போட்ட கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

வேலைக்கு போவது தொடர்பான தகராறில்  கணவர் தற்கொலை:  போலீஸ் விசாரணை
X

திருவள்ளூர் அருகே மணவாளநகர் குமரன் நகரை குடும்பத்துடன் வசித்து வருபவர் அன்பரசன் (35). இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்த நிலையில். கடந்த சில மாதங்களாக அன்பரசு சரிவர வேலைக்கு போகாமல் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்ததால் குடும்பம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மனைவி அன்பரசனை பலமுறை கேட்டு கண்டித்து உள்ளார். இதன்காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 29ம் தேதி அன்பரசன், எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை முடிந்து அன்பரசன் வீடு திரும்பினார். பின்னர் கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த அன்பரசன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுசம்பந்தமாக அனுசுயா கொடுத்த புகாரின்பேரில், மணவாளநகர் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி இது குறித்து வழக்கு பதிவு செய்து,சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Updated On: 12 Aug 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்