மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது

வேப்பம்பட்டு அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் திருமணமான பெண் தூக்கிட்டு தற்கொலை. தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவனை செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அடுத்த பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் வினோத் இவர் துபாயில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவராகப் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த 25 தினங்களுக்கு முன்பு வினோத் துபாயிலிருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வினோத்திற்க்கும் அவரது மனைவி மஞ்சுளாவிற்க்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 23ஆம் தேதி மஞ்சுளா வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவர் வினோத் மஞ்சுளாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மஞ்சுளாவின் உடல் வைக்கப்பட்டிருந்ததை பார்த்த அவரது பெற்றோர்கள், மஞ்சுளாவின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி செவ்வாப்பேட்டை காவல்துறையினரிடம் மஞ்சுளாவின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரில் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த செவ்வாப்பேட்டை காவல்துறையினர் மஞ்சுளாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவன் வினோத்தை நேற்று காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu