ஜிம்களை திறக்க வேண்டும்
உடற்பயிற்சி நிலையங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடற்பயிற்சி நிலைய உரிமையாளர்கள் கோரிக்கை
HIGHLIGHTS
ஊரடங்கின் காரணமாக நண்பகல் 12 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் இயங்கலாம், ஹோட்டல், மருந்து கடைகள் போன்றவை வழக்கம்போல் இயங்கலாம் என அறிவித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப்பட்டது.
இதன் காரணமாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருபவர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டு இருப்பதால் உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருபவர்கள் வருமானம் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர்.
எனவே உடற்பயிற்சி செய்து மக்கள் ஆரோக்கியமாக இருக்கவும், உடற்பயிற்சி கூடத்தை நடத்துபவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மூடப்பட்டு இருக்கும் அனைத்து உடற்பயிற்சி கூடங்களையும் தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.