ஊத்துக்கோட்டை பஸ் நிலையத்தில் மோதிக்கொண்ட அரசு பள்ளி மாணவர்கள்

ஊத்துக்கோட்டை  பஸ் நிலையத்தில் மோதிக்கொண்ட அரசு பள்ளி மாணவர்கள்

ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் மோதிக்கொண்ட மாணவர்கள்.

ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேருந்துநிலையத்தில் இரண்டு குழுக்களாக பிரிந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மோதினர். காவல்துறையினரை கண்டதும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்த நிலையில் ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் திடீரென மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருந்த நிலையில் பேருந்து நிலையத்திற்கு வெளியே இருந்த ஊத்துக்கோட்டை காவல் துறையினர் தகவல் அறிந்து பேருந்து நிலையத்திற்குள் வந்த நிலையில் காவல்துறையினரை கண்டதும் மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

மேலும் எதற்காக தாக்கிக் கொண்டனர் என்ன காரணம் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் இதுபோன்று பொது இடங்களில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் இச்சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story