/* */

கூவம் ஊராட்சியில் கொரோனா நிவாரண நிதி விநியோகம்

கூவம் ஊராட்சியில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் . ரமேஷ் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கூவம் ஊராட்சியில் கொரோனா நிவாரண நிதி விநியோகம்
X

கூவம் ஊராட்சியில் கொரோனா நிவாரண நிதியை கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் மோ. ரமேஷ் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கூவம் ஊராட்சி அமைந்துள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த கொரானா வைரஸ் நோய் தொற்று நிவாரண தொகையை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை ரூ. 2000 நிகழ்ச்சியை இன்று கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் மோ. ரமேஷ் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு ரூ. 2000 வினியோகம் செய்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கடம்பத்தூர் துணைத் தலைவர் சரஸ்வதி ரமேஷ், கவுன்சிலர் சக்திதாசன், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் உடனிருந்தனர்.

Updated On: 16 May 2021 6:17 AM GMT

Related News