/* */

புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகளுக்குள் தகராறு: ஒருவர் காயம்

புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகளுக்குள் தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

HIGHLIGHTS

புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதிகளுக்குள் தகராறு: ஒருவர் காயம்
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி. புழல் மத்திய பெண்கள் சிறையில். பல்வேறு குற்ற பிரிவுகளில் கைது செய்யப்பட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறையில் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத நுழைவு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதான வெளிநாட்டு பெண் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலையில் சிறையில் உள்ள நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அனினி மோனிகா (Anyini Monica) தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ககோஸ் ஸ்டெல்லா, கெடிட்ல்வாஸ்ர் லிசி (Kakoze Stella, Keditlwasr Lizzie ) ஆகியோர் உள்பட வெளுநாட்டு கைதிகளுக்கு இடையே ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது.

இதில் கெடிட்ல்வாஸ்ர் லிசியின் கண்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறை பெண் காவலர்கள் இரு தரப்பினரையும் சமரசம் செய்து காயமடைந்த லிஸியை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பெண்கள் சிறையில் பரப்பரப்பு ஏற்பட்டது.

Updated On: 9 Jun 2023 6:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு