லஞ்சம் கேட்ட துணை வட்டாட்சியர் தற்காலிக பணி நீக்கம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

லஞ்சம் கேட்ட துணை வட்டாட்சியர் தற்காலிக பணி நீக்கம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
X

பைல் படம்.

பட்டா மாற்றி கொடுப்பதற்கு லஞ்சம் கேட்ட துணை வட்டாட்சியர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் செங்குன்றம் மண்டலத்துக்கு துணை தாசில்தாராக பணியாற்றி வருபவர் சம்பத். இவரிடம் கடந்த வாரம் செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் கூட்டு பட்டாவில் உள்ள குளறுபடியை நீக்குவதற்காக அணுகி உள்ளார். அப்போது துணை வட்டாட்சியர் சம்பத், பட்டாவில் இருந்து பிரித்து தரவேண்டுமென்றால் நான் அதற்கு கொஞ்சம் பணம் செலவாகும் என்று லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுப்பதற்கு விரும்பாத அந்த நபர், இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இது சம்பந்தமாக விசாரணை நடத்தியதில், பட்டா விவகாரத்துக்கு லஞ்சம் கேட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து துணை வட்டாட்சியர் சம்பத்தை தற்காலிகமாக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
the future of ai in healthcare