திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 865 பேருக்கு கொரோனா, 13 பேர் பலி!

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 865 பேருக்கு கொரோனா, 13 பேர் பலி!
X
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 4 நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இன்று ஒரே நாளில் 865 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 1277 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இன்று 13 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8237 ஆக உள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,316 , இதில் 91,698 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1381 ஆக உள்ளது

Tags

Next Story