திருவள்ளூரில் இன்று 1890 பேருக்கு கொரோனா, 28 பேர் பலி

திருவள்ளூரில் இன்று 1890 பேருக்கு கொரோனா, 28 பேர் பலி
X
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மேலும் 679 பேர் குணமடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இதன் வெளிப்பாடாக இன்றைய தினமும் 1890 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உருவாகியுள்ளது. மேலும் 679 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் இன்று கொரோனாவின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உள்ளது. மாவட்டத்தில் இன்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 11,017 ஆக உள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 84,641, இதில் 72,562 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.

மாவட்டத்தில் இதுவரை கொரோனாவின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1962 ஆக உள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!