திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 389 பேருக்கு கொரோனா தொற்று.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 389 பேருக்கு கொரோனா தொற்று.
X
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என மாவட்ட நிர்வாகம் தகவல்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் வெளிப்பாடாக இன்று ஒரே நாளில் மாவட்டத்தில் 389 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உருவாகியுள்ளது.

மேலும் 312 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் இன்று வீடுகளில் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2575 ஆக உள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50, 512 ஆகவும் 47, 206 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 731 ஆக உள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture