திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 1410 பேருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 1410 பேருக்கு கொரோனா
X
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என நிர்வாகம் தகவல்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 1410 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 1503 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.மாவட்டத்தில் இன்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 7992 ஆக உள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,510 ஆகவும், இதில் 68,540 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.

இதுவரை கொரோனாவின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 978 ஆக உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

Tags

Next Story
ai in future agriculture