திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது.
ஒரே நாளில் 61 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 70 பேர் கொரோனாவில்ருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவின் காரணமாக ஒருவரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 765 ஆக உள்ளது. இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,686 ஆகவும், இதில் 1,10,180 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1741 ஆக உள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu