தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம்
X
திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்போட்டோர் நலத்துறை கல்வித்துறை பணியாளர்கள் பிரிவு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

ஒவ்வொறு துறையில் உள்ள கோரிக்கைகளை அந்தந்த துறையில் உள்ள பொறுப்பாளர்கள் சுட்டிக்காட்டினர். அதாவது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுன் ஊதியத்தை உயர்த்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் இருந்து கால முறை ஊதியமாக மாற்ற வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் விடுதி ஊழியர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும், விடுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டு்ம், சுகாதாரத்துறையில் தின கூலியில் பணியாற்றும் பன்நோக்கு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், விளையாட்டுத்துறையில் அவுடஷோர்சிங் முறையில் பணியாற்றும் ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கிகரிக்க வேண்டும்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பணியில் இருந்து மாற்று திறன் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு விளக்களிக்க வேண்டும், இதய நோய் , புற்றுநோய் , காசநோய் மேலும் உடலில் பலத்தரப்பட்ட நோய்,உள்ளிட்ட அரசு ஊழியர் ஆசிரியர்கள், கற்பமுற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியைகளின் மருத்துவ அறிக்கையை பெற்று விளக்களிக்க வேண்டும்.

அதாவது எல்லா தேர்தல் நேரங்களிலும் இதுபோன்று பாதிப்புள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை அலைக்கழிப்பு செய்து மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இந்த சிரமத்தை போக்க ஒவ்வொரு தாலுக்கா அலுவலகங்களிலும் இதற்கென தனி அலுவலர்களை நியமித்து அவர்களை அலைக்கழிப்பு செய்யாமல் உடனுக்குடன் தீர்வுகான வேண்டும், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு முதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் வாக்கினை வழங்வேண்டும் , தபால் வாக்கு செலுத்த அலுவரின் கையொப்பம் பெறும்முறையை கைவிட வேண்டும், தபால் வாக்கு படிவம் கொடுக்கும் முன்னரே கையொப்பமிட்டு வழங்க வேண்டும்.

அரசு ஊழியர்களும் தேர்தலில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும். ஏற்கெனவே உத்திரபிதேச மாநிலத்தில் ஒரு அரசு மருத்துவர் தேர்தலில் நின்று போட்டியிட்டு தோல்வி அடைந்து மீண்டும் அரசு பணிவழங்க உச்ச நீதி மன்றம் ஒரு உத்தரவு வழங்கி உள்ளதாக பத்திரகை வாயிலாக அறிந்தோம். இதனை பின்பற்றி விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும், வெற்றி பெற்றால் அரசு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே பதவியில் பணியில் சேரலாம் என்ற உத்தரவை தேர்தல் ஆணையும் பிறப்பிக்கவேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் அழைப்பாளராக கலந்துக்கொண்டு எவ்வாறு பேருரையாற்றினார்.

மாநில நிர்வாகிகள், ஜான்சன், சூர்யபிரகாஷ், சுகுணா, மகாதேவி, அலெக்ஸ், பொன்னுரங்கம், அண்ணாதுரை , டில்லி, ஷாலின், பாலு, தமிழ்ச்செல்வன், ஜெகன், குமார், மணிகண்டன், மோகன், கருணன்,மகளிர் பிரிவு நிர்வாகிகள சரோஜினி, வாணி, மாவட்ட நிர்வாகிகள் சந்திரன், ஜீவா, எம்ரோஸ், கிரிஸ்டோபர், பிரபு, கிள்ளிவளவன் , மோகன், மாரிமுத்து, உட்பட 100 மேற்பட்ட மூன்று துறை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story