/* */

திருவள்ளூர் அருகே ரயிலில் சிக்கி 9 வகுப்பு மாணவி உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே புட்லூரில் உறவினர் வீட்டிற்கு வந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே ரயிலில் சிக்கி 9 வகுப்பு மாணவி உயிரிழப்பு
X

சென்னையில் இருந்து அரக்கோணம் வரை செல்லக்கூடிய விரைவு மின்சார வண்டியில் புட்லூர் ரயில் நிலையம் அருகில் 9ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி விபத்தில் சிக்கி உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் பகுதியில் உள்ள குலாம் நதி என்ற ஊராட்சியில் வசித்து வருபவர் அன்பழகன். இவருக்கு இரண்டு பிள்ளைகள். மகள் பெயர் மகாலட்சுமி 9.ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது சகோதரர் பிரசாந்த் 8.ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் விடுமுறை விட்டிருப்பதால் விடுமுறையை கழிக்க இவர்கள் திருவள்ளூர் மாவட்டம், புட்லூர் ஊராட்சியில் அமைந்துள்ள மாணவர்களின் சித்தப்பா வீட்டிற்கு வந்திருந்தனர்.

பின்னர் நேற்று இரவு விரைவு ரயில் பிடித்து பழனி செல்வதற்காக புட்லூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் செல்லக்கூடிய விரைவு ரயிலில் விபத்தில் எதிர்பாராத விதமாக மகாலட்சுமி சிக்கி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் இருப்புப் பாதை காவலர்கள் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு உடனடியாக விபத்தில் சிக்கிய மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.15 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் புட்லூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 14 April 2024 7:52 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...