தம்பி சாவில் மர்மம் இருப்பதாக அண்ணன் புகார்: புதைத்த இடத்தில் பிரேத பரிசோதனை

தம்பி சாவில் மர்மம் இருப்பதாக அண்ணன் புகார்: புதைத்த இடத்தில் பிரேத பரிசோதனை
போலீசார் முன்னிலையில் இறந்தவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத  பரிசோதனை நடத்தப்பட்டது.
போரூர் மதனந்தபுரம் பகுதியில் தன் தம்பியின் சார்பில் மரணம் இருப்பதாக அண்ணன் போலீசில் புகார் அளித்தார்.

போரூர் அருகே இறந்து அடக்கம் செய்யப்பட்ட தம்பியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அண்ணன் புகார் செய்தார். புதைக்கப்பட்ட உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை போரூர் மாங்காடு அருகே மதனந்தபுரம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராம்ராஜ்( வயது 36), இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சஷ்டிராம் என்ற ஒன்றரை வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி காலையில் வீட்டின் படுக்கை அறையில் ராம்ராஜ் இறந்து கிடப்பதாக அவரது மனைவி அவரது உறவினர்களிடம் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உறவினர்கள் பார்த்தபோது படுக்கையறையில் ராம்ராஜ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் ஏதும் தெரிவிக்காமல் அவரது உறவினர்கள் எல்லாம் சேர்ந்து ராம்ராஜ் உடலுக்கு இறுதி சடங்கு செய்து மதனந்தபுரத்தில் உள்ள சுடுகாட்டில் ராம்ராஜ் உடலை அடக்கம் செய்து உள்ளனர். இந்த நிலையில் தனது தம்பியான ராம்ராஜ் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணான் ராஜூவ் காந்தி மாங்காடு போலீசில் அளித்த புகாரின் பேரில் மாங்காடு இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் வருவாய்த்துறையினர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் இன்று மதனந்தபுரத்தில் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்ட ராம்ராஜ் உடலை அங்கேயே தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் என்பதால் அவர் இயற்கையாக இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட விசாரணை நடத்தப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story