/* */

பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருட்கள் விற்பனை: ஆந்திர இளைஞர் கைது

திருவள்ளூரில் பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்த ஆந்திர இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருட்கள் விற்பனை: ஆந்திர இளைஞர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள்.

திருவள்ளூரில் பள்ளி மற்றும் கல்லூரி அருகில் போதைப்பொருட்களை தெலுங்கில் பேசக்கூடிய நபர் ஒருவர் அவ்வப்போது வந்து விற்பனை செய்வதாகவும், அந்த நபர் குறித்த அங்க அடையாளங்களை தெரிவித்ததோடு புத்தகங்களை எடுத்துச் செல்வது போன்ற தோள் பை வைத்திருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவா, சக்திவேல் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் புட்லூர் ரயில் நிலையம் அருகே தனியார் பள்ளி அருகில் சந்தேகத்திற்கிடமாக தோள் பையுடன் சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவன் ஆந்திர மாநிலம், கோதாவரி மண்டலத்தை சேர்ந்த சீனிவாசலு மகன் ஆதித்யா (22) என்பது தெரியவந்தது.

அவரிடம் மேற்கொண்ட சோதனையில் அவனிடமிருந்து 27 பாட்டில்களில் 10, 50, 100 மி.லி. அளவு கொண்ட பாட்டில்களில் நிரப்பப்பட்டு இருந்த ஆஷ் ஆயில், அதேபோல் பாலிதீன் கவரில் நிரம்பியிருந்த ஒரு லிட்டர், அரை லிட்டர் பாக்கெட்டுகளையும் சதுர வடிவிலான போதை பொருளாக பயன்படுத்தும் கருவி 12 ம் பறிமுதல் செய்தனர். மேலும் அலுமினியத்தால் ஆன கஞ்சாவை பொடியாக்கும் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஆந்திர மாநிலத்தில் இருந்து போதைப் பொருட்களைக் கொண்டுவந்து சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் பள்ளி மற்றும் கல்லூரி அருகே மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் கஞ்சா கடத்தல் தொடர்பாக தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருவதால் அதனை ரயில் மற்றும் பேருந்து மூலம் எடுத்துச் சென்றால் பிடித்து விடுவார்கள் என பயந்து அதனை எண்ணெய் வடிவமாக (ஆஷ் ஆயில்) மாற்றி நாட்டு மருந்து எனக் கூறி எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் 30 கிலோ கஞ்சா விதை மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு ஒரு லிட்டர் ஆஷ் ஆயில் தயாரிப்பதாகவும் அதனை சுமார் ஒரு ரூ. 1 லட்சம் வரை விற்று வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த ஆஷ் ஆயிலை நேரடியாக சிகரெட் மீது தடவி புகைப்பது, பிரட் சாக்லேட் மற்றும் கேக்கில் தடவி உண்பது, ஒரு துளியை நுனி நாக்கில் தடவிக் கொள்வது ஆகிய முறைகளில் உட்கொள்வது மிகுந்த போதை தரும் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ. 3.5 லட்சம் என மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் திறமையாக செயல்பட்டு நூதன முறையில் கஞ்சா இலை கொண்டு வந்து விற்பனை செய்து வந்த நபரை கைது செய்து சுமார் ரூ 3.5 லட்சம் கஞ்சா பொருட்களை கைப்பற்றிய சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவா, சக்திவேல் மற்றும் அவர்களது குழுவினரை மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் நேரில் வரவழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா பொருட்களின் பழக்கத்தை அறவே ஒழிக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் தங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது பற்றி தெரிந்தால் திருவள்ளூர் மாவட்ட பொலீஸ் எஸ்பி க்கு 6379904848 என்ற அவரது பிரத்தியேக எண்ணில் தொலைபேசி மூலமாகவோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ தகவல் தெரிவித்து காவல்துறையுடன் இணைந்து போதையில்லா சமுதாயத்தை உருவாக்க உதவுமாறு மாவட்ட போலீஸ் எஸ்பி வருண் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 14 Feb 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!