பூண்டி ஏரியில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பூண்டி ஏரியில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

உயிரிழந்த மீனவர்.

பூண்டி ஏரியில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் அரும்பாக்கம் இருளர் காலனி பகுதி சேர்ந்தவர் சீனிவாசன். மீனவரான இவர் வழக்கம்போல் அதிகாலை மீன் பிடிப்பதற்காக பூண்டி ஏரிக்கு படகில் சென்றுள்ளார். அப்போது சீனிவாசன் திடீரென மயங்கி படகில் இருந்து தண்ணீருக்குள் விழுந்துள்ளார்.

தகவலறிந்த புல்லரம்பாக்கம் போலீசார், மற்றும் திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து புல்லரம்பாக்கம் போலீசார் மற்றும் திருவள்ளூர் தீயணைப்புதுறை நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் பூண்டி ஏரியில் இறங்கி பல இடங்களிலும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. திரும்பி சென்று விட்டனர்.

இந்நிலையில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக நேற்று பூண்டிஏரிக்குள் சென்றபோது சீனிவாசன் உடல் மீன் பிடிக்கும் வலையில் சிக்கியது. இது குறித்து ஏரியில் மீனவர் சீனிவாசன் சடலமாக இருப்பது குறித்து புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த புல்லரம்பாக்கம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story