சோழவரம் அருகே 8 வயது சிறுவனை நாய்கள் கடித்ததில் படுகாயம்

நாய்கள் கடித்து குதறியதில் காயம் அடைந்த சிறுவன் மௌலீஸ்வரன்.
Dog Bites Child -திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எம்.ஜி.ஆர் நகரில் வசிப்பவர் தாஸ்.இவரது எட்டு வயது மகன் மௌனிஷ் குமார் அங்குள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.தாயை இழந்து பாட்டியின் அரவணைப்பில் வாழும் மாணவன் மௌலிஸ்குமார் பள்ளிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த போது சிறுநீர் கழிப்பதற்காக எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது வீட்டருகே வெட்ட வெளிக்கு சென்றுள்ளார். அங்கு இயங்கி வரும் பன்றி பண்ணையில் வளர்க்கப்படும் பன்றிகளை மேய்ப்பதற்காக 20க்கும் மேற்பட்ட நாய்கள் வளர்க்கப்படுகின்றன.இந்த நாய்கள் மௌலிஷ் குமாரை கண்டவுடன் திடீரென சூழ்ந்து கடித்து குதற ஆரம்பித்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த மௌலிஸ் குமாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து நாய்களை விரட்டி மாணவனை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டி வந்தனர் அங்கு குழந்தை மௌலிஸ் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சோழவரம் காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்துள்ளனர். மேலும் பன்றி பண்ணையையும் பன்றி மேய்ப்பவர்களையும் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் ஆர்ப்பாட்டம் செய்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மாறாக பன்றி பண்ணையின் உரிமையாளருக்கு அரசு அதிகாரிகளும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் துணை போவதாகவும், இந்த குழந்தையை போன்று பலரும் இதனால் பாதிக்கப்படுவார்கள் எனவும் இது தொடர்ந்தால் இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu