ஒண்டிகுப்பம் பகுதியில் பெண்ணிடம் 3 சவரன் செயின் பறிப்பு!

திருவள்ளூர் அடுத்த ஒண்டிகுப்பம் பகுதியில் பெண்ணிடம் 3 சவரன் செயின் பறிப்பு - மணவாள நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருவள்ளூர் அடுத்த ஒண்டிகுப்பம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி திருவள்ளூரில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை பணிமுடிந்து வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் ஜெயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 3சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அவர் கூச்சலிட்டதும் மர்ம நபர்கள் ஜெயலட்சுமியை தாக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். கீழே விழுந்ததில் ஜெயலட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் மணவாள நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிக்கும் சம்பவம் அதிகரித்து உள்ளது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu