/* */

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற சிறுமிகள் மாயம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற சிறுமிகள் மாயமானதால் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற சிறுமிகள் மாயம்
X

திருவள்ளூர் மாவட்டம் புதுகுப்பம் பகுதியை சேர்ந்த உறவினர்களான 14 வயது மாணவிகள் இருவர் அலமாதியில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

நேற்று பிற்பகல் இவர்கள் இருவரும் பள்ளியில் இருந்து அழைப்பு வந்துள்ளதால் பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து பள்ளி சீருடையில் சென்றுள்ளனர். மாலை வரை வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து வெங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவிகளின் பெற்றோர், அரசு பள்ளி ஆகிய இடங்களில் விசாரணை நடத்தி சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற இரண்டு சிறுமிகள் மாயமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 25 March 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  4. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!