தாமரைப்பாக்கத்தில் மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்

எல்லாபுரம் ஒன்றிய மதிமுக சார்பில், தாமரைப்பாக்கத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மதிமுக தலைவர் வைகோ ஆனைப்படி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி குடியரசுத் தலைவரை வலியுறுத்தி, பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம்.தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பாபு தலைமை வகித்தார். எல்லாபுரம் ஒன்றிய மதிமுக செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள்,கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் மாவட்ட ,ஒன்றிய கழக, கிளைக்கழக நிர்வாகிகள்,தோழர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், மக்களாட்சி கோட்பாட்டிற்கு விரோதமாகவும் செயல்படும் தமிழக ஆளுநரை கண்டித்து கழக கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் கனல் காசிநாதன், தலைமைக் கழக பேச்சாளர் விஜயராகவன்,மாவட்ட கழக செயலாளர் பூவை பாபு, ஒன்றிய கழகச் செயலாளர் வெங்கடேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரபு ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியில் ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu