/* */

வெங்கல் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 11 லாரிகள், 5 ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல்

வெங்கல் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 11 லாரிகள், 5 ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

வெங்கல் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 11 லாரிகள், 5 ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அடுத்த மெய்யூரில் தனியார் நிலத்தில் சவுடு மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டுவிட்டு மாற்று இடத்தில் மணல் கொள்ளை நடப்பதாகவும், அதிக ஆழம் மணல் அள்ளப்படுவதாகவும் மாவட்ட கனிமவளத் துறை அதிகாரிகளுக்கும் வெங்கல் காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்தனர் இந்தப் புகாரின் பேரில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையில் கொண்ட தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அனுமதிக்கப்பட்ட இடத்தை விட்டுவிட்டு மாற்று இடத்தில் மணல் கொள்ளை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட 11 லாரிகளையும், 5 ஜேசிபி இயந்திரங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து லாரிகளை வெங்கல் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் லாரி ஓட்டுlர்கள் இது குறித்து கூறுகையில், தாங்கள் முறையாக பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டு பிறகுதான் மணலை ஏற்றிக் கொண்டு வந்தோம் வரும் வழியில் போலீசார் திடீரென எங்கள் வாகனங்களை வழிமறித்து ஆவணங்களை காட்டும்படி கேட்டனர். சரியான ஆவணங்களையும் ரசீதை காட்டியும் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து எங்களை அலைக்கழிகக வைக்கின்றனர். இதுபோன்று போலீசார் பொய் வழக்கு திரும்ப பெறாவிட்டால் லாரி சங்கங்களை திரட்டி பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 30 May 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க