/* */

பூந்தமல்லி: விதிமுறைகளை மீறும் கடைளுக்கு சீல்: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

பூந்தமல்லி நகராட்சியில் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

இன்று முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள நிலையில் மளிகை, காய்கறி போன்ற அத்தியாவசிய கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சி வியாபாரிகளுடன், அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆணையர் ரவிசந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. குறிப்பாக கடை வாசலில் பொதுமக்கள் நிற்க வட்டமிடுதல், தனிமனித இடைவெளி கடைபிடித்தல், கிருமி நாசினி வழங்குதல், குளிர் சாதன பெட்டி இயக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

அதேபோல் அரசு அறிவித்த கடைகள் தவிர்த்து சலூன், ஜவுளி உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி இல்லை. மேலும் உரிய பாதுகாப்புடன் கடைகளை செயல்படுத்த வேண்டுமென நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார். கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைக்கு அபராதம் விதிப்பதோடு தொடர்ந்து அதே போன்று செயலில் ஈடுபட்டால் கடையை மூடி சீல் வைக்கப்படும் என எச்சரித்தார்.

Updated On: 6 Jun 2021 4:32 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்