பூந்தமல்லி: சிறையில் பீங்கானை உடைத்து தற்கொலைக்கு முயன்ற கொலை குற்றவாளியால் பரபரப்பு..!

சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டில் மர்ம நபர்கள் நகை திருடும் போது அந்த வீட்டில் இருந்தால் தாய் மற்றும் மகளை கத்தியால் குத்தினார். இதில் தாய் ஜெயந்தி என்பவர் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அந்தோணி குமார் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரை புழல் சிறையில் அடைத்தனர். சில நாட்களுக்கு முன் புழல் சிறையில் இருந்து பூந்தமல்லி தனி கிளைச் சிறைக்கு அந்தோணி குமார் மாற்றப்பட்டார்.
இந்நிலையில் சிறையில் உள்ள கழிப்பறைக்கு சென்ற அந்தோணி குமார் நேற்று அங்கிருந்த பீங்கானை உடைத்து கழுத்து மற்றும் கையை அறுத்துக் கொண்டார். இதையடுத்து சிறை வார்டு முத்துராமன் அந்தோணி குமாரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவர்கள் விரைந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். போலீசார் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu