பூந்தமல்லி அருகே வாகன சோதனையில் சிக்கிய கைத்துப்பாக்கி: மூவர் கைது

பூந்தமல்லி அருகே வாகன சோதனையில் சிக்கிய கைத்துப்பாக்கி: மூவர் கைது
X

வாகன சோதனையில் சிக்கிய கைத்துப்பாக்கி.

பூந்தமல்லி அருகே காவல்துறை வாகன சோதனையில் காரில் வந்த நபர்களை சோதனை செய்ததில் கைத்துப்பாக்கி சிக்கியது.

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் காவல் துறையினர் வாகன தணிக்கையின் போது கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அதிவேகமாக வந்த காரை நிறுத்த முற்பட்ட போது காரை நிறுத்தாமல் காவல்துறையினரை மோதுவது போல் தப்பி சென்ற காரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.காரில் சோதனை செய்ததில் சட்டவிரோதமாக 9 எம்.எம். கைத்துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

துப்பாக்கி மற்றும் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் காரில் வந்த 4.பேரில் பிரவீன் (வயது 24).சுனில் ( வயது 23).நரேஷ் குமார்( வயது 23) ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய நாகேந்திரன் என்பவரை தேடி வருகின்றனர்.

நசரத் பேட்டையில் பா.ஜ.க. பிரமுகர் பி பி ஜி டி சங்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் சாந்தகுமார் இவர்களிடம் கை துப்பாக்கி கொடுத்து வைத்திருந்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business