/* */

வயதான தம்பதியினர் தற்கொலை

வயதான தம்பதியினர் தற்கொலை

HIGHLIGHTS

வயதான தம்பதியினர் தற்கொலை
X

மதுரவாயலில் வேல் நகர் பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரவாயல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் இவருடைய மனைவி அஞ்சலை. அர்ஜுனன் (70) அஞ்சலை (60) இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. வயதான காலத்தில் கணவன் மனைவி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. இதனை அறிந்த அருகில் இருந்த அவரது உறவினர்கள் வீட்டின் கதவைத் தட்டி பார்த்தும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் சமையலறையில் இரண்டு பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக மதுரவாயல் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த மதுரவாயல் காவல் துறையினர் இருவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 May 2021 5:19 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது