/* */

தாமரைபாக்கம் அருகே மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை

தாமரைப்பாக்கம் அருகே திடீரென பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.

HIGHLIGHTS

தாமரைபாக்கம் அருகே மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
X

தாமரைப்பாக்கம் அருகே திடீரென பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

தாமரைப்பாக்கம் அருகே திடீரென பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 2000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நெல்மணிகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை. அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூர் பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்து 2000.க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிய நிலையில் நெல்மணிகள் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தாமரைப்பாக்கம் அடுத்த வெள்ளியூர் கிராமத்தில் 100.க்கு மேற்பட்ட விவசாயிகள் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கடந்த டிசம்பர் மாதம். கடைசியில் பெய்த கனமழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருந்தன. தண்ணீர் வடிந்த நிலையில் தற்போது கதிர் முற்றி அறுவடைக்கு தயாராக இருந்த 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நெல்மணிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் வெளியேற வடிகால் முறையாக இல்லாததால் நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன.நெல்மணிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி முளைத்து விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றிற்கு சுமார் 25000ரூபாய் முதல் 30000ரூபாய் வரை செலவு செய்து பயிரிட்ட நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் திடீர் மழையால் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழையால் பாதிப்படைந்த தங்களது நெற்பயிருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 5 Jan 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  2. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  3. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  4. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  5. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  7. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!
  8. ஆன்மீகம்
    ஆறுமுகனின் அருள்மொழிகள்: ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்
  9. வீடியோ
    🔴LIVE : T20 World Cup squad ROHIT SHARMA press meet |...
  10. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!