/* */

மோட்டார்பைக்- லாரி மோதி விபத்து : பெண் பலி

மோட்டார்பைக்- லாரி மோதி விபத்து : பெண் பலி
X

திருவள்ளூர் மாவட்டம் குமணன்சாவடி அருகே மோட்டார்பைக் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் இடல் புஷ்பா (32). போரூர் ராமாபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் மோட்டார்பைக்கில் அவரது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருவேற்காட்டை அடுத்த குமணன் சாவடி அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி அவரது வாகனம் மீது மோதியது.இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த புஷ்பா அந்த லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி ஓட்டுநர் டில்லிபாபு வை கைது செய்தனர்.

Updated On: 7 April 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!