/* */

அம்பேத்கர் சாதிய தலைவராக கட்டமைக்கப்படுவதாக திருமாவளவன் புகார்

நல்லிணக்கத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள், சுயநலமான தலைவர்களால் அண்ணல் அம்பேத்கர் சாதிய தலைவராக கட்டமைக்கப்படுவதாக திருமாவளவன் புகார்

HIGHLIGHTS

அம்பேத்கர் சாதிய தலைவராக கட்டமைக்கப்படுவதாக திருமாவளவன் புகார்
X

கோப்பு படம் 

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே தனியார் நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அங்கு பேசிய திருமாவளவன், மதுரையில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியும், மாலை அணிவிக்க இடையூறும் செய்து வருகின்றனர். மக்களுக்கு வழிகாட்டும் தலைவர்களுக்கு புரிதல் சரியில்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க முன்னோடியாக செயல்பட்டவர் அண்ணல் அம்பேத்கர், சுயநலமான தலைவர்களால் அண்ணல் அம்பேத்கர் சாதிய தலைவராக கட்டமைக்கப்பட்டுள்ளார். நல்லிணக்கத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் அம்பேத்கரை தலித் தலைவராக சித்தரிப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், சங்பரிவார் அமைப்புகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கூடாது என எதிர்த்தவர்கள். அம்பேத்கர் சிலைகளை மட்டுமே உடைக்க முடியுமே தவிர அவரது சிந்தனைகளை உடைக்க முடியாது. பிஜேபிக்கு உண்மையான எதிரி அம்பேத்கர் தான். ராமதாஸ் ஆரம்ப காலத்தில் இருந்தது போல இருந்திருந்தால் இந்திய அளவில் இன்னொரு கன்ஷிராம் போல வளர்ந்திப்பார். சமூக நீதியை கைவிட்டு சாதிய ரீதியில் ராமதாஸ் மாறுபட்டு விட்டதாகவும் கூறினார்

Updated On: 13 Dec 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  4. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  5. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  6. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  7. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  8. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  9. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  10. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!