/* */

பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம், விஏஓ கைது

பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம், விஏஓ கைது
X

சென்னை அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக விஏஓ கைது செய்யப்பட்டார்.

சென்னை பூந்தமல்லி அடுத்த மேப்பூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு சொந்தமான நிலத்தை பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக மேப்பூர் விஏஓ சதீஷ்குமாரிடம் விண்ணப்பித்திருந்தார். இதனை ஆய்வு செய்த விஏஓ சதீஷ்குமார் பட்டா மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து நாராயணன் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நாராயணனிடம் ரசாயனம் தடவிய ருபாய் நோட்டுக்களை கொடுத்து அனுப்பினார்கள்.

அதை தொடர்ந்து விஏஓ அலுவலகத்தில் லஞ்ச பணத்தை வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விஏஓ சதீஷ்குமாரை கையும், களவுமாக பிடித்தனர். இதையடுத்து அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்து சதீஷ்குமாரை கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் விஏஓ அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 31 Dec 2020 5:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்