/* */

பழவேற்காடு அருகே பழங்குடி மக்கள் குடிசைகள் அமைத்து போராட்டம்.

தனியார் கல்லூரி பெயரில் உள்ள கிராம நத்தம் நிலத்தில் தங்களுக்கு பட்டா வழங்கி குடியிருப்புகளை கட்டித் தர வலியுறுத்தல்.

HIGHLIGHTS

பழவேற்காடு அருகே  பழங்குடி மக்கள் குடிசைகள் அமைத்து போராட்டம்.
X

குடிசை அமைத்து போராட்டம் மேற்கொண்ட பழங்குடியினர்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, பழவேற்காடு அடுத்த மதுரா கள்ளுக்கடைமேடு கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பழவேற்காடு ஏரியில் இறால் மற்றும் மீன் பிடித்தும் கூலி தொழில் செய்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த பகுதியில் கிராம நத்தம் வகைபாட்டில் உள்ள 3.80 ஏக்கர் அரசு நிலம் தனியார் கல்லுாரி பெயரில் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பழங்குடின மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று தனியார் கல்லூரியால் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் குடிசைகளை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் கல்லுாரி பெயரில் உள்ள நிலத்தை ரத்து செய்து, கிராம நத்தம் வகைபாட்டில் உள்ள அரசு நிலத்தினை வீடில்லா பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் வலியுறுத்தினர். குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகரித்துள்ள நிலையில் வீடில்லாமல் மரத்தடியிலும், சாலையிலும் சமையல் செய்து, அங்கேயே தூங்க வேண்டிய நிலையில் இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

உடனடியாக தமிழக அரசு தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி குடியிருப்புகளை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். தொடர்ந்து குடிசைகளை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பழங்குடியின மக்களிடம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 1 Nov 2023 2:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு