உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்

உடற்பயிற்சி கூடத்தை  திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்
X

மீஞ்சூரில் உடற்பயிற்சி கூடத்தை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துறை சந்திரசேகர் திறந்து வைத்தார்.

மீஞ்சூரில் உடற்பயிற்சி கூடத்தை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துறை சந்திரசேகர் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி நிலையத்தை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், திரைப்பட நடிகர் சாய்தீனா ஆகியோர் திறந்து வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் வேளாளர் தெருவில் புதிய உடற்பயிற்சி கூடம் நவீன கருவிகள் மற்றும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டு இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. மீஞ்சூர் லட்சுமிபதி என்பவருக்கு சொந்தமான இந்த உடற்பயிற்சி கூடத்தினை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் மற்றும் திரைப்பட நடிகர் சாய் தீனா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி உடற்பயிற்சி கூடத்தினை திறந்து வைத்தனர்.

பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் உள்ள கருவிகளை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து பயிற்சியாளர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் மிஸ்டர் சவுத் இந்தியா போட்டியில் வெற்றி பெற்ற இரண்டு ஆணழகன்கள் தங்கள் உடல் திறமைகளை காண்பித்து அனைவரையும் அசத்தினர். அவர்களுக்கு பொன்னேரி சட்டமன்ற துரை சந்திரசேகர் மற்றும் திரைப்பட நடிகர் சாய் தீனா ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடி பில்டிங் வெல்பர் சொசைட்டி மாநிலச் செயலாளர் மற்றும் முன்னாள் மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் ஆசியா நாகேஷ் பிரசாத்,மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ai based agriculture in india