வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் பவுண்டேஷன் சார்பில் நிவாரண உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் பவுண்டேஷன் சார்பில் நிவாரண உதவி

பொன்னேரியில் ரஜினிகாந்த் பவுண்டேஷன் மற்றும் அகில இந்திய தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

பொன்னேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்களை ரஜினிகாந்த் பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டது.

பொன்னேரியில் ரஜினிகாந்த் பவுண்டேஷன் மற்றும் அகில இந்திய தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் கன மழை மற்றும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரஜினிகாந்த் பவுண்டேஷன் மற்றும் அகில இந்திய தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் அரிசி, மளிகை சாமான்கள், போர்வை, பாய் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், எல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் 1000.பேருக்கு அன்ன தானமும் வழங்கப்பட்டது

இதனைத் தொடர்ந்து மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் அந்தந்த பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர். பொன்னேரியில் நடைபெற்ற இந்த நிவாரண பொருட்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் ஆர்.சி.சேகர், துணைச் செயலாளர் கருணாகரன்,துணைச் செயலாளர் வெங்கட் முனிவேல் ஆகியோர் வழங்க அந்தந்த பகுதி நிர்வாகிகள் அதனைப் பெற்றுக் கொண்டனர்.பொன்னேரியில்

Tags

Next Story