/* */

பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்

பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை, வாக்காளர் அடையாள அட்டையுடன் முற்றுகையிட்டு, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை  பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
X

பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றையிட்ட பொதுமக்கள். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சி, அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பேரூராட்சியில் 18வார்டுகளாக இருந்த நிலையில், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் வார்டு மறுவரையில் 27வார்டுகளாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், 2வது வார்டுக்குட்பட்ட வேதகிரி தெருவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், வாக்காளர் அடையாள அட்டையுடன் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது வார்டில் இருந்த சில குடியிருப்புகளை மட்டும் அருகில் உள்ள வார்டுடன் இணைத்துள்ளதாகவும், ஏற்கனவே இரு தரப்புக்கும் இடையே பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில் அருகில் உள்ள வார்டுடன் இணைக்க கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

அவ்வாறு இணைத்தால் எதிர்வரும் தேர்தலை புறக்கணிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், நகராட்சி ஆணையர் தேன்மொழி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தற்போது வார்டு மறுவரையறை செய்யப்பட்டு புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் எதிர்ப்பு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக, நகராட்சி ஆணையர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 19 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு