அத்திப்பட்டில் பள்ளியை தரம் உயர்த்த வேண்டி, எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு

X
அத்திப்பட்டில் பள்ளியை தரம் உயர்த்த கோரி ஊராட்சி துணைத் தலைவர் கதிர்வேல், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகரிடம் மனு அளித்தார்.
By - Saikiran, Reporter |5 Sept 2021 5:37 PM
அத்திப்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டி பொன்னேரி எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பார்வையிட்டார்.
அப்போது துணைத் தலைவர் கதிர்வேல் அத்திப்பட்டு ஊராட்சி பாரதி தெருவில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தார்
அருகில் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மற்றும் திமுக நிர்வாகிகள் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu