/* */

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முருகனுக்கு காவடி எடுத்து வழிபாடு

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் முருகனுக்கு காவடி எடுத்து வழிபாடு

HIGHLIGHTS

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முருகனுக்கு காவடி எடுத்து வழிபாடு
X

பொன்னேரி அருகே பங்குனி உத்திர திருவிழாவையொட்டி அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் முருகனுக்கு காவடி எடுத்து வழிபாடு. வேல் அலகு குத்தியும், பால் குடம் சுமந்தும், தேரை இழுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன்.

பொன்னேரி அருகே பங்குனி உத்திர திருவிழாவையொட்டி அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் முருகனுக்கு காவடி எடுத்து வழிபாடு. வேல் அலகு குத்தியும், பால் குடம் சுமந்தும், தேரை இழுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து முருகப்பெருமானை வழிபட்டனர். பொன்னேரி அருகே ஆரணி கிராமத்தில் அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வேல் காவடி எடுத்து, அலகு குத்தி பக்தர்கள் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால்குடம் எடுத்து கொண்டு பாதயாத்திரையாக சென்று வழிபாடு நடத்துவதுவர். 30ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று ஆரணியில் உள்ள எல்லையம்மன் கோவிலில் காப்புக் கட்டிக்கொண்ட பத்தர்கள் அலகு குத்திக்கொண்டனர். எலுமிச்சை, வேல், காய்கனிகள், உள்ளிட்டவற்றை தங்களது உடலிலும் வாயிலும் அலகாக குத்திக்கொண்டனர். மேலும் கூண்டுக்காவடி, எடுத்தும், முருகப்பெருமான் திருஉருவம் கொண்ட தேரினை தங்களது உடலில் கட்டி பக்தர்கள் இழுத்து சென்றனர். அலகு குத்திக்கொண்ட பக்தர்கள் ஆரணியில் இருந்து சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர். பெண்கள் தங்கள் தலைகளில் பால் குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்றனர். காவடிகளை, சுமந்தும், அலகு குத்தியும், கூண்டு காவடியை சுமந்தவாறு பக்தர்கள் அரோகரா, அரோகரா முழக்கங்களை எழுப்பியவாறு முருகனை அருள் பெற்றனர். பக்தர்கள் அலகு குத்தி, சரண கோஷங்களுடன் காவடி எடுத்து சென்றது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.

Updated On: 24 Feb 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.