/* */

தீ விபத்து, குழந்தையை காப்பாற்றிய செவிலியருக்கு பஞ்செட்டி ஊராட்சியில் பாராட்டு

பஞ்செட்டி ஊராட்சியை சேர்ந்த செவிலியர் தீ விபத்திலிருந்து பச்சிளம் குழந்தையை காப்பாற்றியதற்காக ஊராட்சி சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

தீ விபத்து, குழந்தையை காப்பாற்றிய செவிலியருக்கு  பஞ்செட்டி ஊராட்சியில் பாராட்டு
X

தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகளை காற்றிய செவிலியருக்கு பஞ்செட்டி ஊராட்சி சார்பாக நடந்த  பாராட்டு விழா.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்செட்டி ஊராட்சியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் சென்னை கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி பச்சிளம் குழந்தைகள் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்பு அங்கிருந்த தீயணைப்பு உபகரணங்களை கொண்டு உடனடியாக அந்த தீயை கட்டுப்படுத்தி அங்கிருந்த பச்சிளம் குழந்தைகளை அவர் காப்பாற்றினார்.

இதற்காக தமிழக முதலமைச்சர் அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார். இதனை தொடர்ந்து நேற்று ஜெயக்குமார் வசிக்கும் பஞ்செட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அப்போது செவிலியர் ஜெயக்குமாருக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

Updated On: 23 Jun 2021 6:48 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  2. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  5. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  10. சென்னை
    பூங்காக்களில் வளர்ப்பு நாய்கள் அழைத்து வர புதிய கட்டுப்பாடு!