முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி..!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி..!
X

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 

பொன்னேரியில் 37 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பொன்னேரி அருகே 37 ஆண்டுகளுக்கு முன்பு படித்த அரசுப் பள்ளி அறிவியல் பிரிவு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. நண்பர்களுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்த 70ஸ் கிட்ஸ்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1985 - 87ம் ஆண்டு கல்வி பயின்ற அறிவியல் பிரிவு முன்னாள் மாணவர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 37ஆண்டுகளுக்கு முன்னர் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். தனியார் நிறுவனம், அரசுத்துறை என பல்வேறு பணிகளில் உள்ள 70ஸ் கிட்ஸ் தாங்கள் கல்வி பயின்ற வகுப்பறைகளையும் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடந்த மலரும் நினைவுகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகிழ்ந்தனர்.


தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களையும் அழைத்து அவர்களை கௌரவித்து அவர்களுடனான நினைவுகளையும் நிகழ்வில் நினைவு கூர்ந்தனர்.. தங்களது பள்ளி கால நண்பர்களை சந்தித்த மகிழ்ச்சியில் அவர்களை ஆரத்தழுவியும், அனைவரும் செல்ஃபி எடுத்தும் தங்கள் 37 ஆண்டுகளின் முந்தைய நினைவுகளை அசை போட்டனர்.. தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future