/* */

அதிமுக கிளைச் செயலாளர் வெட்டிக்கொலை; இருவர் காவல் நிலையத்தில் சரண்

கஞ்சா விற்பனையை தடுத்த அதிமுக கிளைச் செயலாளரை நள்ளிரவில் கொலை செய்த கொலையாளிகள் இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்

HIGHLIGHTS

அதிமுக கிளைச் செயலாளர் வெட்டிக்கொலை;  இருவர் காவல் நிலையத்தில் சரண்
X

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சிலம்பரசன், இவர் எம்ஜிஆர் நகர் அதிமுகவின் கிளைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு வீட்டின் அருகே சிலம்பரசன் உடல் முழுவதும் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.

இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சிலம்பரசனை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ், ரஞ்சித் குமார் ஆகிய இருவர் சோழவரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். கஞ்சா விற்பனையை காட்டிக் கொடுதத்தால் ஏற்பட்ட தகராறில் சிலம்பரசனை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இருவரிடமும் சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 17 Aug 2021 8:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?