கும்மிடிப்பூண்டி அருகே நடந்த சாலை விபத்தில் கணவன் கண் முன் மனைவி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி கணவன் முன்னே மனைவி பலியானார். அதிர்ஷ்டவசமாக கணவன் உயிர் தப்பினார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார் பாளையம் ஊராட்சி கோங்கள் கிராமத்தை சேர்ந்தவர் கபிலன் (38), அமுதா (29) தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி லோகேஷ் (8) என்ற மகனும், லோகிதா (6) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கபிலன் தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது எம்.எச் சாலையில் நாகராஜா கண்டிகை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கிய அமுதா உடல் நசுங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரம்பாக்கம் போலீசார் 108ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அமுதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து அமுதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார். கணவன் கண் முன்னே அரங்கேறிய இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu