/* */

ஊத்துக்கோட்டை: ஆறு வழிச்சாலை ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

Farmer Meeting Today -ஊத்துக்கோட்டையில் ஆறு வழிச்சாலை தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

HIGHLIGHTS

ஊத்துக்கோட்டை: ஆறு வழிச்சாலை ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
X

ஊத்துக்கோட்டையில் ஆறுவழிச்சாலை தொடர்பாக விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Farmer Meeting Today - இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக ஆந்திரா மாநிலம் சித்தூர் முதல் தச்சூர் வரையில் சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் இணைக்கும் வகையில் ஆறு வழிச்சாலை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பள்ளிப்பட்டு மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள 34 கிராமங்கள் வழியாக 116 கிலோ மீட்டர் தொலைவில் 1238 ஏக்கர் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் வழியாக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்டங்களாக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊத்துக்கோட்டையில் விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடனான அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஆறு வழி சாலை திட்டத்தை விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்க மறுத்த நிலையில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஒருகட்டத்தில் பேச்சுவார்த்தையை புறக்கணித்த விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். மேலும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சாலை பணிகளை மேற்கொள்ளும் நெடுஞ்சாலை ஆணையத்தை கண்டித்து முழக்கங்களை ஏற்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 6வழி சாலை திட்டத்தை விளைநிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று பாதையில் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Jun 2022 9:05 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  2. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  5. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  6. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  7. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  10. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!