/* */

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த ரயில்வே மேலாளர் கணேஷ் தலைமையிலான அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது\

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
X

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் சென்னை மண்டல ரயில்வே மேலாளர் கணேஷ் தலைமையிலான அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டனர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்துவது குறித்து சென்னை மண்டல ரயில்வே மேலாளர் கணேஷ் தலைமையிலான அலுவலர்கள் குழு இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.

'அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே சார்பில், நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை நவீன மயமாக்கும் பணிகள் நடைபெற உள்ளது. அதற்காக, இந்தியா முழுவதும் 1275 ரயில் நிலையங்களும் தமிழகத்தில் 60 ரயில் ரயில் நிலையம் தேர்வு செய்யப்பட்ட நிலையில் தேர்வு செய்யப்பட்ட ரயில் நிலையங்களில், முக்கியத்துவம் வாய்ந்த கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை ரயில்வே குழுவினர் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது வணிக வளாகம், எலக்ட்ரானிக் தகவல் பலகை, ரயில் பயணியர் ஓய்வு அறை, மேம்படுத்தப்பட்ட நடைமேடைகள், தரமான அடிப்படை வசதிகள், பார்க்கிங் வளாகம், ‛லிப்ட’ வசதியுடன் நடைபாலம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.


ஆய்வின் போது, மண்டல மேலாளர் கணேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது ; தமிழகத்தில் உள்ள தேர்வு செய்யப்பட்ட ரயில் நிலையங்களை ஆய்வு செய்து தேவைப்படும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும், அதற்கான இரண்டாம் கட்ட ஆய்வில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் நிதி ஒதுக்கீடு செய்த பின் பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார்,

மேலும் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிறுத்தப்படுவது குறித்து ரயில்வே நிர்வாகம் முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார்.

முன்பதிவு கவுண்டரில் பதிவாளர்கள் நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டை உடனடியாக ஆராய்ந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பொது கவுண்டரில் கடந்த நான்காண்டுகளாக ஒரு கவுண்டர் மூடப்பட்டுள்ளது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Updated On: 27 March 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?