/* */

தாமதமாக இயக்கப்படும் புறநகர் ரயில்கள், அவதியடையும் பயணிகள்

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் புறநகர் ரயில்கள் சுமார் 1மணி நேரம் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்

HIGHLIGHTS

தாமதமாக இயக்கப்படும் புறநகர் ரயில்கள், அவதியடையும் பயணிகள்
X

கோப்புப்படம் 

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் புறநகர் ரயில்கள் சுமார் 1மணி நேரம் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் அவதி. சிர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறநகர் ரயில்கள் தாமதம்.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சிர்கார் எக்ஸ்பிரஸ் ரயில் பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்து, மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டு ரயில்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டது.

தொடர்ந்து சிர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலை ஆய்வு செய்த ரயில்வே ஊழியர்கள் வேகத்தை குறைத்து பாதுகாப்புடன் மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று நிறுத்தி பழுது சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்கத்தில் செல்லும் புறநகர் ரயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

காலை நேரத்தில் சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் அலுவலகம் செல்வோர் அவதியடைந்தனர். தொடர்ந்து சிர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ரயில்வே ஊழியர்களால் சரிசெய்யப்பட்டு சுமார் 2 மணி நேர தாமத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றது.

சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 4 வழிப்பாதை பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ரயில் பயணிகள் இது போன்று பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

Updated On: 13 May 2023 3:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  2. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  3. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  4. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  5. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  7. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  8. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...