/* */

தடுப்பணையில் குளிக்க சென்ற 9ஆம் வகுப்பு மாணவன் சேற்றில் சிக்கி உயிரிழப்பு

ஆரணியாற்றின் தடுப்பணையில் குளிக்க சென்ற 9ஆம் வகுப்பு மாணவன் சேற்றில் சிக்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

தடுப்பணையில் குளிக்க சென்ற 9ஆம் வகுப்பு மாணவன் சேற்றில் சிக்கி உயிரிழப்பு
X

திவாகர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியை சேர்ந்த திவாகர் (15). அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். ரம்ஜான் விடுமுறை நாளில் நண்பர்களுடன் ஆரணியாற்றின் தடுப்பணையில் குளிக்க சென்றார். அப்போது திவாகர் ஆற்றில் தேங்கி இருந்த சேற்றில் சிக்கி தத்தளித்தார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து கவரைப்பேட்டை போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் குளிக்க சென்ற மாணவன் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 4 May 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!